Sunday, December 27, 2009

அம்மா

சந்தோச தருணங்களில்
நினைவுக்கு வருவதில்லை நீ ...!!!
கடினமான நேரங்களில் முதலில்
நினைவுக்கு வருவது நீதானே
என் அம்மா ...!!!!!
எனக்கு இப்பொழுது அப்படித்தான் ...
உன் மடியில் தலை சாய்த்து
ஒரு நாழி தூங்கினால்
ஏழு ஜென்மம் என்னை
கஷ்டம் தீண்டாதே .... !!!!

Saturday, December 19, 2009

சங்கமம்

நம் கண்கள் சங்கமிப்பதை
நீ
தவிர்க்கும் போதெல்லாம்
உறுதியாகிறது,
உனக்கு பிடிக்காத காதல்
உனக்கு பிடித்த என் மூலமாய்
உன் மனதில் குடிகொண்டது என்று ....

Friday, December 18, 2009

பிறந்த நாள்

நான் பார்த்த பூக்களுக்கு எல்லாம்
தினமும் பிறந்த நாள்,
உன்னை தவிர ....
உனக்கு மட்டும்தான்
வருடத்தில் ஒரு முறை வருகிறது
பிறந்த நாள் ... !!!!

அம்மா

இந்த உலகே சூது நிறைந்ததம்மா ...
காப்பாயா எனை
மீண்டும்
உன் கருவறையில் வைத்து ..... ????

Thursday, December 17, 2009

காதல்

காதல்
ஒருவனை கள்வனாக்கும் ,
அவள் மனதை திருட .....
அல்லது
காதல்
ஒருவனை கவிஞனாக்கும்,
மற்றவர் தூக்கம் கெடுக்க ...

Friday, December 4, 2009

உன் கன்னச்சிவப்பு

என்னவளே !!!
உன் கன்னங்கள்
பார்க்கையில் எனக்கு வருகிறது
ஒரு சந்தேகம் ..
உன் கன்னம்
இயற்கையிலே சிவந்ததா ...
அல்லது
என்னை பார்ப்பதால் சிவக்கிறதா என்று ... !!!
குழம்புகிறேன்
விடை தெரியாமல் ......!!!!
எழுதி தருவேன்
என் சொத்தையும்
ஐயம் தீர்ப்பவருக்கு ... !!!!

மதுக்கடை

காந்தி ஜெயந்தி அன்றும்
மதுக்கடை திறந்துள்ளதே ....
உன் கண்கள் ... !!!!!

Thursday, December 3, 2009

கண்கள்

நானும் நீயும்
அருகில் இருக்கையில்
பேசுவது ஏதாவது ஒன்றுதான் ..
நம் கண்கள் ...
அல்லது
நம் உதடுகள் ....

Saturday, October 31, 2009

பெண்களிடம் நான்

பெண்களை கண்டால்
கிண்டல் செய்வது
எனக்கு வாடிக்கை ...
உன்னை கண்டால்
அடங்கி போவது
எனக்கு வேடிக்கை ...
பெண்களிடம் கண்ணை
பார்த்து பேசுவது
எனக்கு வாடிக்கை ...
உன்னிடம் பேசுகையில் மட்டும்
நிலம் நோக்குவது
எனக்கு வேடிக்கை ...
பெண்களின் அருகில்
இருக்கும் பொழுது
இதயம் துடிப்பது
எனக்கு வாடிக்கை ...
உன் அருகில்
இருந்தால் மட்டும்
இதயம் வெடிப்பது
எனக்கு வேடிக்கை ...
பெண்களிடம்
திணராமல் பேசுவது
எனக்கு வாடிக்கை ..
உன்னை கண்டால் மட்டும்
என் உதடுகள்
தந்தி அடிப்பது
எனக்கு வேடிக்கை ..

சந்தேகம்

பாண்டிய மன்னனுக்கு
அன்று வந்த சந்தேகம்
இன்று எனக்கும் வருகிறது ...
பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையிலே மனம் உண்டா என்று ...
நீ தலை குளித்து விட்டு என்னருகே வருகையில் ...

சூரியகாந்தியின் மயக்கம்

சூரியன் உதிக்கும் நேரம்
தோட்டம் பக்கம் இனி போகாதே ..
சூரியனை கண்டு மலர வேண்டிய
சூரியகாந்தி பூக்கள்
உன் அழகில் மயங்கி கிடப்பதை பார்...

அழகு சிலை

வித்தியாசமான
அழகு சிலையடி நீ ....
நீ நடமாடினால்
உறைந்து சிலையாகிறேன் நான் ...

அர்ஜுனா விருது

அடியே ... !
நீ என்னை பார்க்கையில்
உன் விழிகள் வீசும்
பௌன்சரிலும் பீமரிலும்
நான் நிலை குலைந்து போகிறேன் ...
ஆச்சர்யமாக இருக்கிறது ...
இன்னும்
உனக்கு ' அர்ஜுனா' விருது கிடைக்காதது ...

Sunday, September 6, 2009

நட்பின் வலி

நட்பென்னும் பாயசம்
திகட்ட திகட்ட தந்தவளும் நீதான் ...
பிரிவென்னும் விஷம்
திணற திணற தந்தவளும் நீதான் ...

உன் போல் எவளும் இதுவரை
எனக்கு இருந்ததில்லை ....
இனிமேலும் இருக்க போவதில்லை ...

யார் கண்ணோ
பட்டு விட்டது ...
நம் நட்பு
பட்டு விட்டது...
என் நெஞ்சமோ
புண் பட்டு விட்டது...

உன் மேல் பிழையா
என் மேல் பிழையா ?
எனக்கு தெரியாது ...

உன் ஈகோ போகுமா
என் ஈகோ போகுமா
எனக்கு தெரியாது ...

உன் கோபம் தீருமா
என் கோபம் தீருமா
எனக்கு தெரியாது ...

நம் நட்பில்
வசந்தகாலம்
வருங்காலத்தில் வருமா
எனக்கு தெரியாது ...

இருந்தும் நடமாடுகிறேன் ....
நம் நட்பு வசந்தகாலத்தின்
சுகமான நினைவுகளை
அசை போட்டுக்கொண்டு .....

Monday, July 13, 2009

உனக்காக ஒரு பாடல்

ஆண் குரல்:
உன் பார்வை ஒன்று போதும்
நான் குழந்தையாய் மாற ....
உன் விரல் நுனி உரசல் ஒன்று போதும்
நான் உறைந்து போக ...
உன் காதல் ஒன்று போதும்
நான் மீண்டும் பிறக்க ...

பெண் குரல் :
கரு நிற மேகம் கண்டால்
உன் கூந்தல்
என் கண்முன்னே ..
ஒளிரும் நட்சத்திரங்கள் கண்டால்
உன் சிரிப்பு
என் கண்முன்னே ..
தகிக்கும் சூரியன் கண்டால்
உன் கோபம்
என் கண்முன்னே ...
அழகிய முழுநிலவை கண்டால்
உன் முகம்
என் கண்முன்னே ....

ஆண் குரல் :
பாரதியார் புகைப்படம் கண்டால்
என் மீசை வருகிறதா
உன் கண்முன்னே ....
வளைந்து நெளிந்த சாலை கண்டால்
என் மூக்கு வருகிறதா
உன் கண்முன்னே ...
காதல் பாடல்கள் கேட்கையில்
என் நினைவு வருகிறதா
உன் கண்முன்னே ...
முருங்கை காய் சாப்பிடுகையில்
என் சில்மிஷங்கள் வருகிறதா
உன் கண்முன்னே ....

பெண் குரல் :
உன் பார்வை ஒன்று போதும்
நான் குழந்தையாய் மாற ....
உன் விரல் நுனி உரசல் ஒன்று போதும்
நான் உறைந்து போக ...
உன் காதல் ஒன்று போதும்
நான் மீண்டும் பிறக்க ...

Wednesday, June 24, 2009

தற்கொலை எண்ணம்

மீனே ... மீனே ...
என்னவள் கண்ணை பார்க்காதே ..
பார்த்தால்
உனக்கு தற்கொலை எண்ணம் நிச்சயம் ...

கிளியே .. கிளியே ...
என்னவள் மூக்கை பார்க்காதே ..
பார்த்தால்
உனக்கு தற்கொலை எண்ணம் நிச்சயம் ...

ரோஜாவே.. ரோஜாவே..
என்னவள் இதழை பார்க்காதே ..
பார்த்தால்
உனக்கு தற்கொலை எண்ணம் நிச்சயம்...

கொல்முகரே .. கொல்முகரே..
என்னவள் முகத்தை பார்க்காதே ..
பார்த்தால்
உனக்கு தற்கொலை எண்ணம் நிச்சயம் ..

என்னவளே .. என்னவளே..
எனை என்றும் நீங்காதே...
நீங்கினால்
எனக்கு தற்கொலை எண்ணம் நிச்சயம் ..

மேக கோலம்

குழந்தைகள் பேசும்
மழலை மொழி போல ,
வான் மகள் எழுதும் மேகக்கோலம் .....
புரியாவிடினும்
அழகாய் இருக்கும் இரண்டும் ....

காதல்

வானம் கிழிந்தால்
மழை ....
நெஞ்சம் கிழிந்தால்
காதல் ...

Friday, June 5, 2009

எரிச்சல்

எரிச்சல் அடைகிறேன் முதன்முறையாக
மழை வந்ததற்கு ....
அருகில் நீ இல்லையே ...

Saturday, May 30, 2009

உணர்ச்சி

பூக்களுக்கும்
உணர்ச்சி உண்டென்று கண்டேன்
உன் கூந்தல் பூக்கள் உதிர்ந்ததும்
தற்கொலை செய்து கொண்டபோது...

தனிமை

பெங்களுரு ..
குளிரும் நகரம்தான் ..
ஆனால் எனக்கு மட்டும் எரிகிறது ...
உன் பிரிவு சோகம்
என்னை தகிக்கிறது ....
அன்று
நீ உன் அருகாமை தந்து
சொர்க்கம் தந்தாய்
இன்று
நீ உன் பிரிவு தந்து
நரகம் தருகிறாய் ...
உன்னை சந்திக்கும் நாள்
சற்று தொலைவில் இருந்தாலும்
கடலை கடப்பது போல் உள்ளதடி
ஒவ்வொரு நாளையும் கடப்பது ....
இந்த பிரிவு
தற்காலிகம்தான் எனினும்
சிறிது நேரம்
நிலம் கண்ட மீனை போல்
துடிக்கிறேன் நான் ...

வெட்கம்

நிலவுக்கும் காதல் வெட்கமோ ...??
ஆதவனை கண்டதும்
ஓடி ஒளிகிறாலே....

Thursday, May 21, 2009

நானும் இயேசுதான்

இயேசு மட்டுமல்ல ...
நானும் உயிர்த்தெழுவேன்
உன் பார்வை என்னை தீண்டினால் ....

அமுதசுரபி

அமுதசுரபிக்கு போட்டியோ ...??
வற்றாமல் சுரக்கிறதே
நம் காதல் .....

Tuesday, May 19, 2009

பூகம்பம்

என் வீட்டு பகுதியில்
அடிக்கடி பூகம்பம் வருமாம்...
நீ என் தெருவுக்கு வருவது
அவர்களுக்கு எப்படி தெரியும் ?????

ரத்தம் சிந்தவா நான் ?

ரத்தம் சிந்தவும் நான் தயார் ...
மருந்தாக நீ வருவாய் எனில் ....

Sunday, March 8, 2009

செம்பு நான்

தங்கத்துடன் கலந்த
செம்பு நான் ...
உன்னுடன் இருந்தால்
உலகை நான் மதிப்பதில்லை ...
உன்னை நீங்கினால்
உலகம் என்னை மதிப்பதில்லை ....

மாற்றம்

இந்த உலகில்
மாற்றமென்பதே நிலையானது !!!!
என் காதல்
உன் கல் மனதையும் மாற்றும் ...
மாற
தயாராய் இரு என் கண்ணே....

மோப்ப நாய்

நானும்
ஒரு வகையில் மோப்ப நாய்தான் ....
என் நெஞ்சில்
நிலநடுக்கம் தர
நீ என்னை நெருங்கி வந்தால்
கண்டுபிடிப்பேன் நானும் .....

யுத்தம்

கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது ..
ஆம், என்னவள் எதிரே வருகிறாள்
கண்ணில் சண்டை போட....

கீச்சு குரல் கிளியே

குயிலின் குரல்தான்
சிறந்ததா என்ன ....?
யார் சொன்னது
என்னவளின் கீச்சு குரல்
தேனாய்
என் காதில் ஊற்றுகிறதே ....

காற்று

காற்றும் புகாமல்
என் அறையை கட்டினேன்
நீ வந்து சென்றால்
உன் வாசம்
எளிதில் நீங்க கூடாதல்லவா ....

உன் கை பிடித்தால்

நிலவில்
நடப்பதாய் உணர்கிறேன்
உன் கை பிடித்து நடக்கையில் .....

தேவதை ....

தேவதைகளை
நம்பாமலிருந்தேன்
உன்னை வெள்ளை உடையில் பார்க்கும் வரை ...

நினைவு

வந்து சென்றாயே என் கனவில் ...
தந்து சென்றாயே உன் நினைவை ....

பூவே...

உறங்காமல்
உன்னை பார்த்து கொண்டிருக்கிறேன்
நீ
தூக்கம் கலைந்து எழுவது
காலையில்
மலரும் பூ போல் இருப்பதை
பார்த்து ரசிப்பதற்காக ......

நாத்திகன்

நாத்திகனாய் இருந்தாலும்
நிதம் கோவில் வருகிறேன்
'கோவில் அம்மனை ' பார்க்க அல்ல
என்
'காதல் அம்மனை ' பார்க்க ....

மேகம்

உன்
முகமென்னும் நிலவுக்கு
கூந்தல் என்ன மேகமா .... ?
மேகம் கொண்டு
நிலவை
அடிக்கடி மறைக்கிறாயே ....

முகாரி

காதலும் கஜல்தான்
எனக்கு
முகாரி பாடும் வரை .....

Thursday, February 19, 2009

முடி

நீ
என்னிடம் சண்டைபோட்டு
என்னை திட்டும் போது
உன் காதருகில் இருக்கும் முடி ஆடுகையில்
ம்ம்ம்ம்ம்ம்ம் ......
நன்றாகத்தான் இருக்கிறது ...

தொற்றுநோய்

காதல்
என்ன தொற்றுநோயா ?
உன்னை பார்த்ததும்
பற்றிக் கொள்கிறதே.....

வலி

வலிக்கவில்லை
காதல் என்னை அடித்தால்....

காற்று

காதல் என்றால்
காற்று என்று கேட்கிறது
உன்னை கண்ட நாள் முதல் .....

விஷம்

சிரிப்பும்
விஷமென்று அறிந்தது
உன் சிரிப்பை கண்ட கணம்தான் ....

ஆடையில் என்னடி கண்ணே ....?

என்னிடம் கேட்டாய்
'நான் ஜீன்ஸ் அணிந்தால்
உனக்கு பிடிக்குமா இல்லை
நான் சுடிதார் அணிந்தால்
உனக்கு பிடிக்குமா?' என்று
நான் கூறினேன்
'ஆடையிலா பால் மட்டுமே
என்றும் எனக்கு பிடிக்கும்' என்று
சிறிது நேரம் குழம்பி
பிறகு
செல்லமாய் அடித்தாய் என்னை...

பார்வை

உன் பார்வை என் மேல் படும் நேரம்
நான் சிதைந்து போகும் நேரம் .....

கண்கட்டு வித்தை

உன் பார்வையில்
என்னை கட்டிபோடுபவளே...
உன் கண்ணை
சிறிது மூடேன்
என் வாழ்கையை
சிறிது நேரம் வாழ்ந்து பார்க்கிறேன் .....

கண்ணீர்

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் வழியுதடி...
எனவே அதிகம் அழாதே ...
என்னில் இருப்பது
ஆறு லிட்டர் ரத்தம்தான் ...

Wednesday, February 11, 2009

அம்மாவாகிய நான்

உன் தெற்றுபல் தெரிய
நீ சிரிக்கும் சிரிப்பு அழகு...

யாரவது கூப்பிடுகையில்
நீ ஓடி ஒளிவது அழகு ....

சாப்பாடு ஊட்டுகையில்
நீ செய்யும் அடம் அழகு .....

பள்ளியிருந்து வந்ததும்
நீ கேட்கும் மடிதூக்கம் அழகு ...

அம்மா என்றழைக்காமல் செல்லமாக
எனை பேர் சொல்லி அழைப்பது அழகு....

கண்ணே !!!!!!
கண்ணின் மணியே !!!!!
சில மாதங்கள்
நான் உனக்கு
பிராண வாயு அளித்திருக்கலாம்

ஆனால்
பிறந்த நாள் முதல்
இன்று வரை
எனக்கு பிரான வாயு அளிப்பது
நீதான் .... !!!!!!

Tuesday, January 27, 2009

பள்ளிக்கூடம்

இன்றும்
நினைவில் இருக்கிறது ...

தந்தை கைப்பிடித்து
பள்ளி சென்ற கணங்கள் ...

ABCD தவறாக எழுதி
ஆசிரியரிடம் அடிவாங்கிய கணங்கள்...

முதல் முறை பேச்சு போட்டியில்
வெற்றி பெற்ற கணங்கள் ...

நண்பனிடம் சண்டை போட்டு
அப்பாவிடம் அழுத கணங்கள் ..

பள்ளிநேரத்தில் படம் பார்க்க சென்று
மாட்டிக்கொண்ட கணங்கள் ....

பிடிக்காத வாத்தியாரின் பட்டப்பெயரை
சுவற்றில் கிறுக்கி குதூகலித்த கணங்கள் ...

நட்பு நான்கு இருந்தால் நானூறு செயல்
புரியலாமென புரிந்துகொண்ட கணங்கள் ...

வாழ்க்கை கல்வியை
ஒரு வருடம் மட்டும் பள்ளியில்
நான் பயிலவில்லை ....

பள்ளியில்
ஒவ்வொரு நாளிலும்
நான் கற்றுகொண்டது
வாழ்க்கையின் வெவ்வேறு பாடங்கள்....

Friday, January 23, 2009

பாரம்

என் நாளின் தொடக்கம்
நிதம் நீ என்னை பார்க்கும் பார்வை ..
இதயத்தில் பாரம் உணர்கிறேன்
என் நாள் தொடங்காவிடில்...
என்னவளே...
அடிக்கடி என் இதயத்தில் பாரம் ஏற்றாதே...
இறந்து விடுவேன்
பாரம் தாங்காமல்...