Wednesday, December 31, 2008

கஞ்சன்

நான் கஞ்சனடி ....
பார்....
உன் நிழலை கூட
பூமிக்கு தராமல்
என்னுள் வாங்கி வருகிறேன் .....

உன் பெயர்

உன் பெயர் சொல்கையில்
என் வாயில் இனிப்பை உணர்கிறேன்
உன் பெயர் முடிகையில்
என் நெஞ்சில் வலியை உணர்கிறேன் ....

காற்றா நானா ?

காற்றையும் வெறுக்கிறேன்
நம்மிடையே வந்தால் ......