Sunday, August 7, 2011

அவள் பார்க்கும் கணம்

அவள் என்னை பார்க்காத கணங்களில்
கடவுளிடம் ஆதங்கப்படுகிறேன்
என்னை படைத்ததற்காக .... !!!!
அவள் என்னை பார்க்கும் கணங்களில்
கடவுளிடம் பெருமிதப்படுகிறேன்
என்னை படைத்ததற்காக ... !!!!

Friday, November 26, 2010

என் பெயர் சதீஷ்

இந்தி மொழி படித்தது இல்லை நான் ..!!!
காதல் மொழி படிப்பதால்
வந்தேன் உன்னுடன் திரைப்படத்திற்கு ...!!!

மூன்று மணி நேரம் சேர்ந்திருந்த நாம்
மூச்சு வரை சேரலாமே என்ற என் எண்ணமே
நமக்குள் ஊடல் வர காரணம் !!!!!

வார்த்தை வாளால்
கிழித்திருந்தால் கூட
சிரித்திருப்பேன் நான் ...!!!

மௌனம் எனும் கத்தியால்
குத்தி விட்டாய் என்னை..
சிதைந்துவிட்டேன் நான்....!!!!

உலகத்திற்கு
நாம் பொருத்தமான ஜோடியாக தெரிந்தாலும்
உன் கண்களுக்கு
ஏனோ இன்னும் ஜோடியாக கூட தெரியவில்லை ...!!!

எந்த மொழி படமாயினும்
எத்தனை மணி நேரமாயினும்
படம் பார்க்க நான் தயார் ...,
என்னுடன் நீயும் இருப்பாய் எனில் ...!!!!

என்னவளே ...!!!
என் பெயர் சதீஷ்.... ,மற்றும்
நான் கெட்டவன் இல்லை...!!!!!

Saturday, November 20, 2010

எந்திரன்

உன்னை பார்க்கும் முன்பு ...,
இதயம் இல்லாத இயந்திரமாகவும்
மூளை உள்ள மனிதனாகவும் இருந்தேன்... !!!
உன்னை பார்த்த பின்பு ...,
இதயம் உள்ள இயந்திரமாகவும்
மூளை இல்லாத மனிதனாகவும் மாறி விட்டேன் ...!!!!

Saturday, November 6, 2010

பட்டாசு

வேண்டாம் பட்டாசு
இனி
உன் சிரிப்பை தா ...!!!!

Tuesday, November 2, 2010

காதல் அலை

அலைக்கும் கரைக்கும் உள்ள தொடர்பு
காதலுக்கும் நட்புக்கும் உள்ள தொடர்பு போல..!!!!
அலை என்றும்
கரையோடு இருக்க முடியாது என்று தெரிந்தாலும்
கரையை தொட முயற்சி செய்வதை
அது ஒரு போதும் நிறுத்தாது
அது போலத்தான்
நானும், என் காதலும் ...!!!!
நட்பின் கரையில் நீ நின்றாலும்
காதல் அலையால்
உன்னை என்றும் நனைத்து கொண்டே இருப்பேன்..!!!!

Sunday, October 24, 2010

வாசகம்

காதலை
வாசகத்தில் மட்டும் படித்தவன்
இன்று உன்னால்
என் சுவாசத்தில் படிக்கிறேன் ..!!!!

Friday, October 22, 2010

எடுத்துக்காட்டு

நம்பிக்கைக்கு ஒரு எடுத்துகாட்டு ,
காதலிக்க மாட்டாய் என்று தெரிந்தும்
உன்னை நான் காதலிப்பது ...!!!!
அவநம்பிக்கைக்கு ஒரு எடுத்துகாட்டு ,
காதலிக்க மாட்டாய் என்று தெரிந்தும்
உன்னை நான் காதலிப்பது ...!!!!
இந்த கவிதை ஒரு எடுத்துகாட்டு ,
காதல் வந்தால்
குழப்பம் தலைக்கேறும் என்பதற்கு ....!!!!!