Thursday, March 11, 2010

கண்ணிமை கன்னியே

கருமை நிறத்தில் இருப்பவை
மனதை கவராது என்ற
என் எண்ணம் உடைந்தது,
உன் கண்ணிமை பார்த்த கணம் ...!!!!

சளி

தினமும்
எனக்கு சளி பிடிக்கிறது...
உன் காதல் மழையில் நனைந்து ...!!!!

சங்கு போல நான்

சுட்டாலும்
சங்கு தன் வெண்மை நிறம் துறக்காது..!!!
நானும் சங்கு போலத்தான் ...
என்னை நீ
வெறுத்தாலும்
என் காதல் நான் துறக்க மாட்டேனடி .. !!!!

விட்டில் பூச்சி

விட்டில் பூச்சிகளும், ஆண்களும் ஒன்றுதான் ...
செத்துப்போவோம் என்று தெரிந்தும்
விளக்கில் விழுவது
விட்டில் பூச்சியின் வாடிக்கை ...!!!
தோற்றுப் போவோம் என்று தெரிந்தும்
காதலில் விழுவது
ஆண்களின் வாடிக்கை ... !!!!!

காற்றையும் நேசிப்பவன்

காற்றையும்
எனக்கு நேசிக்க தோன்றுகிறது ...!!!
காற்றில் கலைந்த
உன் துப்பட்டாவை
வேக வேகமாய் சரிசெய்துவிட்டு
யாரவது பார்த்தார்களா என்று
அழகாய் சுற்றி பார்த்த கணம் ..... !!!!

வேண்டுகோள்

வகுப்பில் இனி
என்னருகில் உட்காராதே ...
வகுப்பு முழுவதும்
உன்னை திரும்பி பார்த்துகொண்டு இருந்ததில்
வலிக்கிறது என் கழுத்து ....!!!

கலவரக்காரி

தெரியவில்லை எனக்கு ..
எங்கிருந்து வந்தாய்
என்ன பேசினாய்
என்ன செய்கிறாய்
என்ன செய்வாய்
தெரியவில்லை எதுவும் ...
எனக்கு தெரிந்தது எல்லாம்
நீ என் இதயத்தில் நுழைந்து
கலவரம் செய்கிறாய் என்பது மட்டுமே ....!!!