Thursday, February 19, 2009

முடி

நீ
என்னிடம் சண்டைபோட்டு
என்னை திட்டும் போது
உன் காதருகில் இருக்கும் முடி ஆடுகையில்
ம்ம்ம்ம்ம்ம்ம் ......
நன்றாகத்தான் இருக்கிறது ...

தொற்றுநோய்

காதல்
என்ன தொற்றுநோயா ?
உன்னை பார்த்ததும்
பற்றிக் கொள்கிறதே.....

வலி

வலிக்கவில்லை
காதல் என்னை அடித்தால்....

காற்று

காதல் என்றால்
காற்று என்று கேட்கிறது
உன்னை கண்ட நாள் முதல் .....

விஷம்

சிரிப்பும்
விஷமென்று அறிந்தது
உன் சிரிப்பை கண்ட கணம்தான் ....

ஆடையில் என்னடி கண்ணே ....?

என்னிடம் கேட்டாய்
'நான் ஜீன்ஸ் அணிந்தால்
உனக்கு பிடிக்குமா இல்லை
நான் சுடிதார் அணிந்தால்
உனக்கு பிடிக்குமா?' என்று
நான் கூறினேன்
'ஆடையிலா பால் மட்டுமே
என்றும் எனக்கு பிடிக்கும்' என்று
சிறிது நேரம் குழம்பி
பிறகு
செல்லமாய் அடித்தாய் என்னை...

பார்வை

உன் பார்வை என் மேல் படும் நேரம்
நான் சிதைந்து போகும் நேரம் .....

கண்கட்டு வித்தை

உன் பார்வையில்
என்னை கட்டிபோடுபவளே...
உன் கண்ணை
சிறிது மூடேன்
என் வாழ்கையை
சிறிது நேரம் வாழ்ந்து பார்க்கிறேன் .....

கண்ணீர்

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் வழியுதடி...
எனவே அதிகம் அழாதே ...
என்னில் இருப்பது
ஆறு லிட்டர் ரத்தம்தான் ...