இந்தி மொழி படித்தது இல்லை நான் ..!!!
காதல் மொழி படிப்பதால்
வந்தேன் உன்னுடன் திரைப்படத்திற்கு ...!!!
மூன்று மணி நேரம் சேர்ந்திருந்த நாம்
மூச்சு வரை சேரலாமே என்ற என் எண்ணமே
நமக்குள் ஊடல் வர காரணம் !!!!!
வார்த்தை வாளால்
கிழித்திருந்தால் கூட
சிரித்திருப்பேன் நான் ...!!!
மௌனம் எனும் கத்தியால்
குத்தி விட்டாய் என்னை..
சிதைந்துவிட்டேன் நான்....!!!!
உலகத்திற்கு
நாம் பொருத்தமான ஜோடியாக தெரிந்தாலும்
உன் கண்களுக்கு
ஏனோ இன்னும் ஜோடியாக கூட தெரியவில்லை ...!!!
எந்த மொழி படமாயினும்
எத்தனை மணி நேரமாயினும்
படம் பார்க்க நான் தயார் ...,
என்னுடன் நீயும் இருப்பாய் எனில் ...!!!!
என்னவளே ...!!!
என் பெயர் சதீஷ்.... ,மற்றும்
நான் கெட்டவன் இல்லை...!!!!!
Friday, November 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Nice
superb....simply luv it ;-)
keep it up!!!
Post a Comment